தேர்!
கோவிலுக்கு செல்பவர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தேரை தொட்டு கும்பிடுவார்கள்.
"அதுலேதான் சாமியே இல்லையே எதுக்கு கும்பிடுறே"ன்னு கேட்டேன். "இதுலே ஒரு விசயம் இருக்கு, இந்த மரத்தைத்தான் நான் கும்பிடுறேன்" என்றார்.
தேர் இலுப்பை மரத்துலே தான் செய்றாங்கன்னு உனக்கு தெரியும். இந்த மரம் உறுதியும் வலிமையும் கொண்டதுங்கிறதுதான் உனக்கு தெரியும். ஆனா, இந்த இலுப்பை மரம் மருத்துவ குணம் கொண்டதென்பது உனக்கு தெரியுமா? காற்றில் இம்மரத்தின் வாசம் பட்டாலே போதும் என்று சொல்லி நகர்ந்து சென்றார்... நான் தேரை அன்னாந்து பார்த்துக்கிட்டு இருந்தேன்!
No comments: