Header Ads

Breaking News
recent

Sinnamma Funnies! Tamil sms

இறந்த பிறகும் ஏமாற்றப்படும் ஜெயலலிதா...

1.ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் கொடுக்கனும்.
2.ஜெயா மறைந்த நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.
3. பாரதரத்தனா விருது வழங்க வேண்டும்..
என சசிகலா தலைமையிலான அதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது...
இதில் உண்மையென்னவெனில்
1.மறைந்த ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட மாட்டாது. அதற்க்கான விதி நோபல் பரிசு கமிட்டியின் விதியில் தெளிவாக உள்ளது...
2.விவாசயிகள் தினம் ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது...
3. பாரதரத்தினா விருது ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அடைந்தவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல. அதுவும் மறைந்த முதல்வர் மேல் 15 க்கு மேற்ப்பட்ட ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்த தகவல்..
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது பாடம் ஜெயலலிதா மீது பற்றும், உண்மையான விசுவாசம் கொண்ட அடுத்தக்கட்ட தலைவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மை.
இதுப்போன்ற அடிப்படை தகவல் கூட தெரியாமல் தான் முதலைமைச்சர், 30 மேற்பட்ட அமைச்சர்கள் , 194 எம்.எல்.ஏ க்கள் , 54 எம்பிக்கள், சபாநாயகர் என வரிசைக்கட்டி நிற்ப்பது கேலிகூத்தானது..
இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்த யார்...?
பல தமிழ்சங்கங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடத்தியவன், குடவோலை முறையை உலகுக்கே அறிமுகப்படுத்தியவன் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பல ஆயிரக்கணக்கான காப்பியங்களை உலகுக்கே ஈன்றவன்தான்..
இத்தனை முட்டாள்களை தேர்ந்தெடுத்தவன்...
#தமிழன் 

No comments:

Powered by Blogger.