வெளிநாட்டு வாழ்க்கை..
•அம்மா அழைக்கிறாள் உன்முகம்
பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற..
வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!
...
•தகப்பன் சொல்கிறார்
தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்..
கல்யாணத்துக்கு பணம்
பத்தல அனுப்பி வைப்பான்னு..!
•தம்பி கேட்கிறான் அண்ணா..
நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன்
சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!
•தங்கை கேட்கிறாள் கண்டிப்பா
என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!
•முகத்தில் மலர்ச்சி காட்டி
உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ
விடியும் எங்களின் வாழ்க்கையென்று..!
No comments: